இதற்கெல்லாம் யார் காரணம் ?..நாம் தானே ..இன்று மிதிவண்டி இல்லாத வீடு கூட இருக்கிறது , பைக் இல்லாத நடுத்தர வீட்டை பார்க்கவே முடியவில்லை.அருகில் இருக்கும் கடைக்கு போக கூட பைக் பயன்பாடு அதிகரித்து உள்ளது
அது மட்டுமா ?? இன்று பல இளைஞர்கள் வீடு கட்டுவதையும் தாண்டி .. தனக்கென ஒரு கார் வாங்குவதையே வாழ்க்கையில் SETTLEஆவது என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்
சாலையில் காற்று கூட புக முடியாத அளவுக்கு வாகனங்கள் நெருக்கிக் கொண்டு செல்கிறது ..ஊரெல்லாம் மாசு ..சுவாசிக்கும் காற்றில் மாசு...குடிக்கும் தண்ணீரில் மாசு...நாசித்துவாரங்களில் எந்நேரமும் படிக்கிறது தூசு
இதற்கு தீர்வு என்ன ???..
சைக்கிள்
உங்களுக்கு இதைக் கேட்டால் சிரிப்பு வரும் ஆனால் பதில் சைக்கிள் தான்
சற்று ஆழ்ந்து யோசித்தால் 60% மக்கள் தினமும் இருபது கிலோ மீட்டர்கு மேல் பயணம் செய்வதில்லை.நாம் ஏன் அந்த பயணத்தை சைக்கிளில் செய்யக்கூடாது ??
யோசித்துப்பாருங்கள் ...நாம் சொகுசாக இருப்பதற்கும் ,விரைவாக பயணிப்பதற்குமெ பைக் ,கார் போன்றவை ...
பைக் ,காரில் செல்வதால் நம் உடலின் நலமும் ,பலமும் குறைகிறது அது மட்டுமா நம் அன்னை பூமியும் மாசு பெறுகிறது
எல்லா தருணத்திலும் நமக்கு அவசரமாக பயணிக்க அவசியம் ஏற்படுவதில்லை ...அப்புறமும் ஏன் நாம் காலத்தை துரத்தி ஓடுகிறோம் ??/
இனிமேலாவது யோசிப்போம் ...20கிலோ மீட்டருக்கு உள்ளே பயணம் செய்வதானால் சைக்கிளில் செல்வோம் .முடியாதவர்கள் பொது வாகனத்தில் செல்வோம்
எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் என உறங்கக் கூடாது , நாம் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை ..எனவே நாமும் ஏதேனும் மாற்றத்தை உருவாக்குவோம்..இனி சைக்கிளில் செல்வோம் சுத்தமான பூமியை நம் குழந்தைகளின் கையில் ஒப்படைப்போம் ...
Tweet | |||||