Monday, April 30, 2012

ஆண்மை என்பது ஆணுக்கு மட்டும் அல்ல

"ஆண்மை தவறேல்!" என்பது ஆணுக்கு மட்டுமே உரிய வாக்கியம் அல்ல.ஆண்மை என்றால் ஆண் என்று மட்டுமே அர்த்தம் அல்ல . ஆண்மை என்றால் வீரம்,நேர்மைக்கு துணைபோகும் மாவீரம் தான் ஆண்மை

ஆண்மை என்பது குணம் தான் ,அது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு.எனவே பாலினம் கருதி ஆண்மை என்ற சொல்லை பயன்படுத்தாதீர்

ஆண்மை என்பது விந்தணுவின் வீரியமோ,நீடித்து நிற்கும் திறமையோ அல்ல , அது அற்பமாக காசு சம்பாதிக்க எண்ணியவர்களின் அப்பட்டமான பொய்
ஆண்மை என்பது கருணையையும்,கோபத்தையும் சமநிலைப்படுத்தி பார்க்கும் திறனே !

ஒரு பெண்ணை நால்வர் பாலத்காரம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .ஒரு கடந்து போகும் ஆண் அதை பார்த்துவிட்டு தட்டிக்கேட்காமல்  போனால் அவன் ஆண்மை நிறைந்தவன் அல்ல.அதே நேரத்தில் மனதளவில் அந்த நால்வரை எதிர்க்கும் பெண் ஆண்மை நிறைந்தவள்.வீரப்பெண்மணி ,கற்பு நிறைந்தவள் (கற்பு என்பது உடலில் அல்ல மனதில் இருக்கிறது .இன்னொரு சமயம் இதை விரிவாக பார்ப்போம் )

சமூகத்தில் நடக்கும் அட்டுழியங்களை நீ கண்மூடி பார்த்துக்கொண்டு இருந்தாயானால் நீ ஆண்மை நிறைந்தவன் அல்ல ..

ஆணாக பிறந்த எல்லோரும் ஆண்மை நிறைந்தவரும் இல்லை , பெண்ணாக பிறந்த எல்லோரும் ஆண்மை அற்றவரும் இல்லை ...
ஆண்மை தவறேல் !!

Sunday, April 29, 2012

எத்தனை காலம் தான் ஏமாறுவாய் ??

கடவுள் நாளை வருகிறார் ..
கதவை திற கடவுள் வருவார் ...
எத்தனை வசனங்கள் நம்மை ஏமாற்ற ??
ஒரு ஆன்மீகவாதியிடம் செல்லுங்கள் உங்களிடம் அவர் சொல்லும் முதல் வார்த்தை என்ன தெரியுமா ? வாழ்க்கை ஒரு மாயை ...வாழ்க்கை மாயைனா அவன் இங்க என்ன மாய உலகத்துல ம**றா புடுங்குறான் ? இதுல நம்ம ஆனந்தமா இல்லைனு வேற சொல்லுவான் ...இது எப்படி தெரியுமா? நோயை பரப்பிவிட்டு மருந்து விற்கும் உத்தி தான் .."நீ சந்தோசமா இல்ல என்ட வா சந்தோசமா ஆகிறலாம் "
நான் உங்களை ஆன்மீகவாதிகளை நம்பாதீர்கள் என்று சொல்லவில்லை "போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் " அவ்வளவு தான்

அப்படியே ரவுண்டு அடுச்சு இன்னொரு பக்கம் பார்த்தா
"அவனை கொன்றுவிடு சொர்கத்தில் இடம் உண்டு "என்ற பிரசாரம் ஒரு பக்கம் நடக்கிறது ..தெரியாமல் கேட்கிறேன் அப்படி பார்த்தால் சொர்கத்தில் கொலை குற்றவாளிகள் தானே இருக்க வேண்டும் ???

இன்னொரு பக்கம் ஆண்டவன் உங்களை பாதுகாப்பார் அவரிடம் ஐக்கியம் ஆகுங்கள் என்று ஒரு பிரசாரம் நடக்கும் ..

அய்யா சாமி நான் மதங்களை குற்றம் சொல்லவில்லை மதங்களை தங்கள் இஷ்டத்துக்கு எத்த மாதிரி வளைத்துக்கொள்ளும் மனிதர்களை தான் குற்றம் சொல்கிறேன் ..

கடவுள் இல்லை என்றும் சொல்லவில்லை அவர் ஒருவர் தான் என்ற போது  அவருக்கு ஏன் நாம் பெயர் வைத்து பிரித்து பார்க்க வேண்டும் ?
அவர் நல்லவர் தான் அதான் நம்ம பண்ற அட்டுழியங்கள் எல்லாம் பொறுத்துக்கொள்கிறார்
முடிவாக கேட்கிறேன்
எத்தனை காலம் தான் ஏமாறுவாய் ??

பின் குறிப்பு : ஏமாறுபவன் இல்லை என்றால் ஏமாற்றுபவன் இருக்க மாட்டன்